Tamil Thathuvam

0
170

அரிசி என்றாலும்

அரசியல் என்றாலும் களையெடுப்பது

அவசியம்

அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்

பல வலிகளை கொடுத்ததும் முகநூல்…

வானிலையைவிட அதி

வேகமாய் மாறுகிறது

மனிதனின் மனநிலை…

காப்பாற்ற வேண்டிய

நேரங்களில் ஓய்வெடுக்க

போய்விடுகிறார் கடவுள்…

புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…

பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…

மனித மனங்களிலிருந்து மனிதநேயம்

மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில் இருக்கின்றது…

மனதை சுத்தப்படுத்த ஒருநொடி

போதும் அந்த ஒருநொடியை

செலவு செய்யத்தான் நமக்கு

மனமில்லை…

கஸ்டங்கள் கவலைகள் உனக்கு

மட்டும் தான் என்று புலம்பாதே

இங்கு சந்தோஷத்தை மட்டும்

அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை…

எங்கு உனக்கு

கேள்வி கேட்க

உரிமையில்லையோ

அங்கு நீ

அடிமைபடுத்தப்படுகிறாய்…

இதயத்தின் காயங்கள் எல்லாம்

இணையத்தில் கிறுக்கல்களாக…

அடுத்த நொடி

நமக்கு சொந்தமில்லாத போது

நீயா நானா என்ற

போட்டி பொறாமைகள் எதற்கு…

விதியை மதியால் வெல்லலாம்

என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்

பல நேரங்களில் விதிதான் வெல்லுது…

நம் பிரச்சனைக்கு

மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்…..

அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது

பூவோடு இருப்பதால் முள்ளை

யாரும் விரும்புவதுமில்லை…..

முள்ளோடு உள்ளதென்று பூவை

வெறுப்பதுமில்லை…..

கஸ்டங்கள் கவலைகள் உனக்கு

மட்டும் தான் என்று புலம்பாதே

இங்கு சந்தோஷத்தை மட்டும்

அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை…

எங்கு உனக்கு

கேள்வி கேட்க

உரிமையில்லையோ

அங்கு நீ

அடிமைபடுத்தப்படுகிறாய்…

இதயத்தின் காயங்கள் எல்லாம்

இணையத்தில் கிறுக்கல்களாக…

அடுத்த நொடி

நமக்கு சொந்தமில்லாத போது

நீயா நானா என்ற

போட்டி பொறாமைகள் எதற்கு…

விதியை மதியால் வெல்லலாம்

என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்

பல நேரங்களில் விதிதான் வெல்லுது…

நம் பிரச்சனைக்கு

மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்…..

அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது

பூவோடு இருப்பதால் முள்ளை

யாரும் விரும்புவதுமில்லை…..

முள்ளோடு உள்ளதென்று பூவை

வெறுப்பதுமில்லை…..

உழைப்பவர்களின்

ஊதியமெல்லாம்

வியர்வையோடு கரைய

ஊழல் செய்கின்றவன்

வாழ்க்கை எல்லாம் மாடி வீடுகளாக

வளர்ந்துக்கொண்டிருக்கு

ஊமையாகவே

இருந்து விடாதே

வாழ்க்கை உன்னை

ஊனமாக்கிவிடும்…

ஆசை படுவதெல்லாம்

நிறைவேறுவதில்லை

நிறைவேறாதவை எல்லாம்

நன்மைக்கே என்று….

மனதை தேற்றிக்கொள்வோம்

நாளை….

கனவைபோன்றது

இன்றைய

நிஜத்தை ரசித்திடு

எதிர்ப்பவரிடம்….

துணிந்து நில்

மதிப்பவரிடம்….

பணிந்துச்செல்

புகழ்ந்தால் மயங்காதே….

இகழ்ந்தால்

தளராதே….

மாயம் என்று

தெரிந்தும்

மயங்குது மனம்

வானவில்

வாழ…

வழியில்லையென்று

புலம்பாதே

நீ பயணித்துக்கொண்டிருப்பது

தான்…

உன் வாழ்க்கையென்று முன்னேறு

சிரித்து கொண்டே இரு….

வலிகள் கூட விலகி கொள்ளும்….

நல்லவனா இருந்தா

கடைசி வரை நல்லவனாவே இருக்கலாமே

தவிர நல்லா இருக்க முடியாது…

அறிவாக பேசுவதை விட

பரிவாக பேசுபவர்களிடமே

மனம் அதிகமாக பேச விரும்பும்…

வீட்டில் உள்ளவர்களை

அறிவினால் அளவிடுவதும்…!

வெளியாட்களை அன்பினால்

அளவிடுவதும் முட்டாள்தனம்…!

தெளிவான

பொய்க்கும்

விளக்கங்கள்

அவசியமற்றது…

சில நேரங்களில்

விவாதங்களும்…

தேவைப்படும்…

போது தேடப்படுவாய்

அது வரை அமைதியாய் இரு…

சிரிப்பு இல்லாத வாழ்க்கை

சிறகு இல்லாத பறவைக்கு சமம்

பறவைக்கு அழகு சிறகு

உங்களுக்கு அழகு சிரிப்பு

பூக்கள் உதிர்வதால் செடிகள் வாடுவதில்லை

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை

உன் எண்ணங்களில் உள்ளது

அழகிய வாழ்க்கை…

அளவான உணவு

உடலுக்கு நலம்

அளவோடு பழகு

உறவுக்கும் நலம்…

குறுகிய காலத்தில்

எடுக்கப்படும் முடிவுகள்,

பின்னர் யோசிக்கையில்,

மனத்திருப்தியற்றதாகவே

இருக்கும்…

(சிந்தித்தல் – தெளிவாகவே)

நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட

உன் குணத்தை காட்டும்

ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ

உன்னையே காட்டும்

எது நல்லது என்பதைத்

தொடர்ந்து சொல்லாதீர்கள்

தொடர்ந்து செல்லுங்கள்

தேடலும் தேவையும்

தீர்வதேயில்லை

மனிதவாழ்வில்

பெற்றோரின் அறிவுரை

நெல்லிக்காயைப்போல் கசந்தாலும்

அதை பொறுமையாக

சுவைத்தால்

வாழ்க்கை

இனிமையாய் இருக்கும்

லட்சியம்

இருக்குமிடத்தில்

அலட்சியம்

இருக்காது…

இரக்க மனமும்

இரும்பாகி போகிறது

சிலர் சுயநலவாதியாகும்

போது…

குறிக்கோள் இல்லாத

வாழ்க்கை வெறும்

குப்பை மேடு தான்…

பழகிய கத்தி என்றாலும்

பதம் பார்க்கிறது

பல நேரங்களில்

பக்குவமில்லாமல்

வருமானத்திற்கு மட்டும்

தான் இங்கு பஞ்சம்

வறுமைக்கு

மட்டும் இல்லை

எப்போதுமே பஞ்சம்…

உழைப்புக்கு

பலன் மெதுவாய்

கிடைத்தாலும்

அது என்றும்

உயர்வாய்தான் பேசப்படும்…

எதிர்காலம்

உள்ளங்கை

ரேகையில் இல்லை

அதுஉன் உள்ளத்தில்

உள்ளது…

பொறுமையும் தன்னடக்கமும்

வாழ்வின் பிற்பகுதியை

வெற்றியாக்கும்…

தனிமையிலிருக்கும்

போது தீயாயிரு

இல்லயேல்

உன்னை எரித்துவிடுவார்கள்

ஏமாற்றம்

வலியைதந்தாலும்

நல்வழியையும் காட்டும்

வாழ்க்கைக்கு

நாமும் நல்லவர்களே

அடுத்தவர் தவறை

சுட்டிகாட்டும் போது மட்டும்

பார்ப்பவன்

என்ன நினைப்பான்

என்று பயத்துடன் வாழாதீர்கள்

படைத்தவன்

என்ன நினைப்பான்

என்று பயந்து வாழுங்கள்

ஒவ்வொரு நிமிடமும்

இந்த உலகத்தை

உன்னால் ஜெயிக்க முடியும்

முதல் நிமிடம் மட்டும்

நிதானமாக யோசித்தால்

ஒவ்வொரு நிமிடமும்

இந்த உலகத்தை

உன்னால் ஜெயிக்க முடியும்

முதல் நிமிடம் மட்டும்

நிதானமாக யோசித்தால்

தலைக்கவசம்

உயிரை காக்கும்

தலைக்கனம்

வாழ்வை அழிக்கும்

நீங்கள்

எதை செய்தாழும்

உங்கள் உள்ளத்திற்க்கும்

உலகத்திற்க்கும் உண்மையாக

நடந்து கொள்ளுங்கள்

ஆசை படுங்கள்

தவறில்லை

பேராசையே

வாழ்க்கைக்கு கேடு

வார்த்தைகளில்

உண்மை இல்லையேனில்

எண்ணங்களில்

தூய்மை இருக்காது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here