Love Kavithai Tamil Lyrics

0
195

என் வரிகளில் உள்ள

வார்த்தைகளுக்கும்

உணர்வுண்டென

உணர்ந்தேன்

நீ துடித்தபோது


சற்றுநேரம்

அனுமதி கொடு

நம் இதயங்கள்

சேர்ந்து கட்டிய

காதல் மாளிகையை

விடவா

இது அழகென்று

பார்த்து விடுகிறேன்


சத்தமின்றி

ஒரு முத்தம்

தினமும் உனக்கு

நீயறியாமல் கொடுத்து

மகிழ்கிறேன்

மௌனமாய் மனதுக்குள்


உனது வருகையே

நிர்ணயிக்கும்

எனக்கான

மணித்துளிகள்

உறைவதையும்

உருகுவதையும்


ஊடலின்

விரிசலை

காதலில்

நெய்கிறாய்


இருளெனை

சூழ்ந்து கொண்டாலும்

உன் நினைவொளியில்

வாழ்வேன்

நானும் அழகிய

உலகில் உன்னோடு


மிகவும் பிடித்த

பொருளொன்று

தொலைந்து

மீண்டும்

கைகளில்

கிடைத்தது போல்

மனம் மகிழ்வில்

உனை காணாமலிருந்து

கண்கள் கண்டதும்


விழிகள் உறங்கிட

மறுக்கும்

போதெல்லாம்

உறங்க வைக்கிறான்

முத்த சத்தத்தில்

தாலாட்டி


மனதை இரும்பாக்கி

கொண்டாலும்

இழுக்கின்றதே

உன்திசை நோக்கி

உன் நினைவும்

என்ன காந்தமா


பற்றிய

கரங்களுடனேயே

என் கடைசி

பயணம் வரை


ஜன்னலை தீண்டும்

தென்றலாய்

மனதை தீண்டி

உயிர் புள்ளிவரை

சென்று

எனை ஆள்கிறாய்

அன்பே


நீ அருகில்

இல்லையென்ற

வெறுமையில்லை

நொடியேனும்

நகராது

உன் நினைவு

உடனிருப்பதால்


என் காதலின்

கருவறையும் நீ

கல்லறையும் நீ


நீள வேண்டும்

இவ் இரவு

நீல வானமாய்

அன்பே


நினைவை தூவுகிறாய்

நிஜமாய் உணர்கிறேன்

நீ உடனிருப்பதாய்


உன் நெற்றி

தீண்டும் போதெல்லாம்

நீ திலகமிட்ட

அழகிய தருணம்

என்னுள்ளும் என்னவனே


வானவில்லிலும் காணாத

வண்ணம்

என்னவனின்

அழகிய எண்ணம்


உனை

பின் தொடரவோ

நான்

நடைபழகியது


ஓய்வென்பதே

கிடையாது

உனை நேசிப்பதில்

மட்டும்

என் மனதுக்கு

அன்பே


காணாத போது

கண்களுக்குள்

வாழ்கின்றாய்


சுமந்தே கடக்கின்றான்

என் மன

சுமைகளையும்

சலிக்காமல்

புன்னகையோடு


காத்திருந்த செவிகளுக்கு

விருந்தளித்தது அன்பே

என்ற உன் குரல்


உன் கண்ணாடி நான்

என் பிம்பம் நீ


ஆயுள் ரேகையை

பற்றி கவலையில்லை

உன் கை ரேகையோடு

இணைந்திருப்பதால்


நீ நீயாகவே

இருப்பதால்

உனை எனக்கு பிடிக்கும்னு

ஆரம்பிச்சி

எனக்காக மாறு என்பதில்

தொடங்குது பிரிவும

பிரச்சனைகளும்


மண்ணில் விழுந்த

மழை துளியாய்

உன் மனதோடு

தொலைந்து விட்டேன்

என்னுயிரே


விலகலில் இல்லை

வாழ்க்கை

உன் விழிகளில்

என்றுணர்ந்தேன்

என்னவனே


என் தேடலென்று

எதுவுமில்லை

நீ தொலையாத

வரையில்


நீ கிறுக்கிய வரிகள்

என்னை கிறுக்காக்கி

கொண்டிருக்கு அன்பே


நீரின்றி

உலகுமில்லை

நீயில்லையெனில்

எனக்குலகமும் இல்லை

உயிரே


உன்னை

வாசித்ததைவிட

உன்னில் சுவாசித்ததே

அதிகம் நான்


நித்தம்

ஒரு புத்தம்புது

விடியலாய்

நானும் புதிதாய்

பிறக்கின்றேன்

உன் நினைவு

சாரல்

எனை நனைக்க


நீ விழிகளில்

கவிதை எழுத

என் விழிகளுக்கு

மையிடுகிறேன்

மையலோடு


அசைபோடும்

உன் நினைவில்

அசைவற்று

காத்திருக்கு

விழிகள்

நீ வருவாயென


மௌனமும்

பேசுமென்று

உணர்ந்தேன்

உன்னருகில்


தனித்து சென்றாலும்

துரத்தி வருகிறாய்

நினைவாகி என்னை


விட்டு பிரியும்

தருணத்தில்

மொத்த காதலையும்

கொட்டுகிறேன்

உன் கரத்தினுள்

என் கையை

பற்றிக்கொள்ளேன்

என்று


எனக்கு

பிடித்ததைவிட

உனக்கு

பிடித்தவைகளையே

மனமும் விரும்பி

ரசிக்கின்றது


மனமும்

குழந்தை தான்

உன்னையே

நினைப்பேன்

என்று பிடிவாதம்

பிடிப்பதில்


சற்றே

நீ விலகினாலும்

இருளாகுது

என்னுலகம்


கண்களை மூடினாலே

கனவாக வந்து

தங்கி கொ(ல்)ள்கிறாய்

விழிகளுக்குள் விலகாமல்


கடிகாரமாய் நீயிரு

நொடி முள்ளாய்

உனை தொடர்ந்தே

நானிருப்பேன்


உன் நினைவுகளாய்

நான் வாழ விரும்பவில்லை

உனக்கு நினைவு

இருக்கும் வரை

உன்னில் வாழ விரும்புகிறேன்


அத்தனை கோபங்களையும்

சட்டென

கரைத்து விடுகிறாய்

உன் குறும்புகளில்


ஆரவாரமில்லா

உன் காதலில்

ஆழமாய்

நானும் மூழ்கித்தான்

போகிறேன்

அழகாய்

நமக்கான உலகுக்குள்


எப்படி எழுதினாலும்

ரசிக்கின்றாய்

இதழ்வரி கவிதையை


சிரிப்பை சிதறவிடாதே

சிக்கி தவிக்குது

நாணமும்


உறங்க போகிறேன்

தேடாதே என்கிறாய்

உன் கனவே நான்தான்

என்பதை மறந்து (கவுத)


தென்றலாய் தீண்டுகிறாய்

புயலாய் சரிகிறது

மனம் உன்னிடத்தில்


ரசிக்க ரசிக்க

சலிக்காத

கவிதை நீ

என் கண்களுக்கு


நீ என்னவன் என்பதில்

எப்போதும் எனக்கு

திமிர் அதிகம் தான்


யாருமற்ற சாலையில்

உடன் பயணிக்கிறது

உன் நினைவுகள்

மட்டும் பேரிறைச்சலுடன்


உதிர்ந்த சருகும்

உயிர் பெற்றது

உன் பார்வை

தீண்ட


தொலைவில்

நீயிருந்தாலும்

உனை கையிலேந்தி

ரசிப்பேன் காதலுடன்

நிலவுப் பெண்ணே


தவிர்க்க முடியாத

காலை நேர

தேனீராய்

நம் நினைவுகளையும்

நான் சுவைக்க

தவறுவதில்லை

அன்பே


கடினம் தான்

ஆனாலும் சுகம்

நீ வருவாய்

என்ற நினைப்பே

காத்திருப்பில்


சென்றபோதும் தங்கிவிட்டாய்

மனதில் வந்த

வழியை பார்த்து

ரசிக்கிறது விழியும்

மீண்டும் வருவாயென


ஒவ்வொரு முறையும்

பிரியங்களை அதிகமாக

அள்ளித் தெளித்தபடியே

செல்கிறது உன் பிரிவு


அதிகாலை ஆதவனாய்

ஆழ் மனதுக்குள்

தோன்றி

உறக்கத்தயும் கலைத்து

விடுகின்றது

உன் நினைவு


பக்கத்தில் நீயில்லாத

போதும்

வெட்கத்தில் தடுமாறுது

வார்த்தைகளும்

எங்கிருந்தோ

உன் குரல் அழைக்க


ஊடலும் கரைந்தது

நீ அன்பால்

கலந்துதந்த

ஒரு கப் காப்பியில்


போகாதே என்ற

கெஞ்சலுக்காகவே

மிஞ்ச தோணுது

உன் வார்த்தையை


அருகில் இல்லாமலேயே

எனை இம்சிக்க

உன் அன்பினால்

மட்டுமே முடியும்

எனதன்பே


கலைந்த கனவுகளை

சேர்த்து கோர்த்து

ரசிக்கின்றேன்

வந்தது நீயல்லவா

கண்களுக்குள்

Related Post: New Life Quotes in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here