Amma Kavithai in Tamil

0
247

காலம் முழுவதும்

உன்னை வயிற்றிலும்

மடியிலும் தோளிலும்

மார்பிலும் சுமப்பவள்

தாய்மட்டுமே

அவளை என்றும்

மனதில் சுமப்போம்


ஆயிரம் விடுமுறை

வந்தாலும் அவள்

அலுவலகத்திற்கு மட்டும்

விடுமுறையில்லை

அம்மா சமயலறை


இன்பம் துன்பம்

எது வந்த போதிலும்

தன் அருகில்

வைத்து அனைத்து

கொள்கிறது தாய்மை


வயது

வித்தியாசம்

பார்ப்பதில்லை

அம்மாவின்

கொஞ்சலில்

மட்டும்

இன்னும் குழந்தையாக


அம்மாவின் கைக்குள்

இருந்த வரை

உலகம் அழகாகத்தான்

தெரிந்தது


வலி நிறைந்தது

என்பதற்காக

யாரும் விட்டுவிடுவதில்லை

தாய்மை ❤


அன்புகலந்த

அக்கறையோடு சமைப்பதால்

தான் எப்போதும்

அம்மாவின் சமையலில்

சுவை அதிகம்


நான் முதல்முறை

பார்த்த அழகிய

பெண்ணின் முக தரிசனம்

அம்மா


இன்று என்னை

இவ்வுலகுக்கு

அறிமுகம் செய்த

என் அன்பு அம்மாவுக்கு

ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்


நான் உன்னுடன்

இருக்கும் பொழுது

என் பிரச்சனை

எப்போதும் மறந்து

விடுகிறேன் செல்லமே

(அம்மா)


எதுவும்

அறியா புரியா வயதில்

எந்த சுமைகளும்

கவலைகளுமின்றி

அன்னையின் கரங்களில்

தவழும் காலம் சொர்க்கமே


உயிருக்குள் அடைக்காத்து

உதிரத்தை பாலாக்கி

பாசத்தில் தாலாட்டி

பல இரவுகள்

தூக்கத்தை தொலைத்து

நமக்காகவே

வாழும் அன்பு

தெய்வம் அன்னை


கடல் நீரை

கடன் வாங்கி

கண்கொண்டு அழுதாலும்

நான் சொல்லும்

நன்றிக்கு போதாதம்மா

அன்னையர் தின வாழ்த்துக்கள்


ஒவ்வொரு நாளும்

கவலை படுவாள்

ஆனால் ஒரு நாளும்

தன்னை பற்றி

கவலை பட மாட்டாள்

(அம்மா)


ஆழ்ந்த உறக்கத்தின்

அஸ்திவாரம்

அம்மாவின் தாலாட்டு


ஆயிரம் உணவுகள்

வித விதமாக சாப்பிட்டாலும்

அன்னை சமைத்த

உணவுக்கு ஈடாகாது


உலகின் நிகழ்வுகளையும்

அழகினையும் எடுத்து

கூறும் முதல்

குருவாக இருப்பவர்

அம்மா மட்டுமே


ஆயிரம் உறவுகள்

உன் மீது அன்பாக

இருந்தாலும்

அன்னையின் அன்புக்கும்

அவள் அரவணைப்பிற்கும்

எதுவும் ஈடாகாது


தாய் மடியைக்

காட்டிலும்

ஒரு சிறந்த தலையணை

இந்த உலகில்

வேறெதுவும் இல்லை


அம்மா ❤

இந்த நேரத்திலும்

தன்னை பற்றி

கவலைகொள்ளாமல்

நமது ஆரோக்கியத்தில்

அக்கறை கொள்ளும்

அந்த உணர்வு

பாசம் தான்

தாய்மை


உன்னை அணைத்து

பிடிக்கும் போதெல்லாம்

உணர்கிறேன் உலகம்

என் கையில் என்று

.எங்கே பார்த்தாலும் காதலர்கள்,

என்னை தான்

காதல் செய்ய யாரும் இல்லை என்று

வீடு திரும்பினேன்..

காத்திருந்தால் எனக்காக சாப்பிடாமல்

என் அம்மா.!

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்

உனக்கு பாரம் தான்,

தெரிந்தும் சுமக்கிறாய் பத்து மாதம்

வரை அல்ல.. உன் ஆயுள் காலம் வரை.

இறைவன் எனக்கு கொடுத்த

முதல் முகவரி

உன் முகம் தான் அம்மா.

பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்,

பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்,

இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்

என் நெஞ்சில் அம்மா.!

வயது வித்தியாசம் பார்ப்பதில்லை,

அம்மாவின் கொஞ்சலில் மட்டும்

இன்னும் குழந்தையாக..!

. நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,

வேறு அமிர்தம் நான் கண்டதில்லை

அம்மா.!

கண்களை மூடி பார்த்தாலும்,

கண்களை திறந்தாலும், கனவிலும்..

என் அன்னையே..

அவள் எப்போதும் நினைப்பது

என்னையே..!

தூக்கத்தில் உன்னைப் பற்றி

நினைப்பவள் காதலி..

தூங்காமல் கூட உன்னையே

நினைப்பவள் தாய்.!

தமிழில் அம்மா என்ற சொல்

எப்படி வந்தது என்று தெரியாது..

ஆனால் அன்பு என்ற சொல் நிச்சயம்

அம்மாவில் இருந்துதான் வந்திருக்கும்.

என்னை நடக்க வைத்து

பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,

நான் விழுந்து விடக்கூடாது என்ற

கவனத்தில் தான் இருந்தது

உன் தாய் பாசம்.

நம் உள்ளத்தின் உள்ளே வாழும்

ஓர் உன்னதமான தெய்வம் அம்மா.!

பத்து மாதம் சுமை, ஒரு மணிநேரம் வலி,

அனைத்தும் மறந்தாள்..

குழந்தையின் முதல் அழுகை

சத்தம் கேட்டதும்.. அம்மா.!

முகத்தை காணும் முன்பே

நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே.

நான் பார்த்த முதல் அழகியும் அவளே..

எனது உலக அழகியும் அவளே

என் அம்மா.

உலக அதிசயம் காண ஆர்வமில்லை..

அன்னையே உன்னை கண்ட பின்.

அம்மா அழகு என்றால் நீ..

அம்மா என்று அழைப்பதில்

அழகும் அழகு பெறுகிறது.

அழுக்கு தேகம், கலைந்த கூந்தல்,

கிழிந்த சேலையிலும் கடவுளாக

தோன்றுகிறாள் அம்மா.

கருப்பை ஒன்றை காதலோடு சுமக்கிறாள்..

வலி என்று தெரிந்தும் வரம் கேட்கிறாள்..

மறுபிறவி பெற்று உனக்கு

உயிர் தருகிறாள் அன்னை.

அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட

அனைவருமே அன்பானவர்கள்..

அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!

நேசிக்கும் உறவுகள் யாவும்

நம் அம்மா ஆக முடியாது.

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்

இருந்தாலும் நாம் ரசிப்பது

நிலவை தான்..

பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்

நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.

எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா

கிடைத்து விடுகிறாள்.. ஆனால்

எல்லா அம்மாக்களுக்கும்

நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.!

துன்பங்கள் வரும் தருணம்

தாயின் மடி சொர்க்கம்.

தாயை வணங்குவோம்

தாய்மையை போற்றுவோம்.

Related Post: Kadhal Kavithai Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here